நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகளின் பங்கு மிக முக்கியமானது என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கான விழாவை காணொளி வாயிலாக நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சௌரி சௌரா சம்பவம் திருப்புமுனையை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். சௌரி சௌரா சம்பவத்தில் வீரமரணமடைந்தவர்களைப்பற்றி துரதிர்ஷ்டவசமாக அதிகம் பேசப்படாமல் போய்விட்டதாகவும், வரலாற்றுப் பக்கங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதாகும் சுட்டிக்காட்டினார். சௌரி சௌரா போராட்டத்தில் […]
