உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் பெக்ராஜ்பூர் கிராமத்தில் வசித்து வரும் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அருகேயுள்ள சந்தைக்கு சென்று விற்று விட்டு டிராக்டர் ஒன்றில் திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் வந்த வாகனம் பாலி பகுதியில் கர்ரா ஆற்று பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தபோது, டிராக்டரின் சக்கரம் ஒன்று கழன்று போயுள்ளது. இதனை தொடர்ந்து, டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த 24 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். 14 […]
