கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த உதவி ஆய்வாளர்கள் 2 பேரும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே […]
