சீனாவில் இளைஞர் ஒருவர் இறக்கும் தருவாயில் தன் உண்மையான பெற்றோர்களை கண்டுபிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீனாவின் ஜியாங்சி மாகாணத்தைச் சேர்ந்தவர் யாவ் சே என்பவர். இவர் கல்லீரலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மகனின் நிலையை அறிந்த இவரது தாய் தன்னுடைய கல்லீரலை கொடுக்க முன்வந்தார். அதன் பிறகு இவர்கள் இருவரும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் இவர்களது ரத்த மாதிரிகள் பொருந்தாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் இவர்கள் யாவ் சேயின் உண்மையான பெற்றோரை கிடையாது. […]
