ஈரானில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டு அரசு வெளியிட்ட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் 20ஆம் தேதி ஈரானில் 14,405 பேர் மரணமடைந்ததாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்திருந்தது. ஆனால் சுமார் 42,000 பேர் அந்நாட்டில் தொற்றுக்கு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,78,827 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என […]
