உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உணவகங்களில் இருந்த கெட்டுபோன இறைச்சி மற்றும் உணவுகளை அழித்துள்ளனர். தேனி மாவட்டம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஜனகர் ஜோதிநாதன், மதன்குமார், மணிமாறன், சுரேஷ் கண்ணன் ஆகியோர் கம்பம் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் கம்பம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சோதனை செய்தபோது அங்கு குளிர்சாதன பெட்டிகளில் கெட்டுப்போன இறைச்சி, மற்றும் உணவுகள் இருந்துள்ளது. […]
