உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள இரும்பு பாலம் மாரியம்மன் கோவில் தெருவில் கருப்பு தேவர் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகன்களுடன் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கருப்பு தேவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணம் அடையாததால் மிகவும் மனமுடைந்த கருப்பு தேவர் வீட்டில் யாரும் […]
