கள்ளத்தொடர்பை கைவிட சொன்னதால் கணவரை கொன்று உடலை வாழைத்தோப்பில் புதைத்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகில் சத்திரம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி ராஜசேகர்(47). இவருக்கு 38 வயதுடைய விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். ராஜசேகர் கடந்த 9 மாதத்திற்கு முன் காணாமல் போனார். ஆனால் விஜயலட்சுமி தனது கணவர் வெளியூர் சென்று இருப்பதாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ராஜசேகர் […]
