அதிமுக கட்சியில் சமீப காலமாகவே உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்ததால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமைக்காக கடுமையாக மோதிக் கொள்கின்றனர். கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் இடக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதேபோன்று ஓ. பன்னீர்செல்வமும் […]
