உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில், ரஷ்யா தற்போது வரை உபயோகிக்கப்படாத அதிக தொலைவு குண்டுவீச்சு ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர்தொடுக்க தொடங்கி 50 நாட்களை தாண்டிவிட்டது. இந்நிலையில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் கிழக்குப்பகுதிகளை நோக்கி அதிகமான படைகளை திசை திருப்பியுள்ளது. இதற்கிடையில், ரஷ்ய நாட்டின் அதிபயங்கரமான ஏவுகணை தாங்கிய மாஸ்க்வா போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த போர் கப்பலிலிருந்த வெடிமருந்து வெடித்ததால் தான் கப்பல் சேதமடைந்திருக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது. […]
