உக்ரைன் மீது மிகப்பெரியளவில் தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக நீடித்து கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. […]
