காபூல் விமான நிலையத்திலிருந்து மக்களை மீட்பதற்காக சென்ற உக்ரேனிய விமானம் கடத்தப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து அது பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் தொடர்ந்து நிலவி வருகின்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து சொந்த நாட்டு மக்களை […]
