ஈகுவடார் நாட்டில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈகுவடார் நாட்டில் உள்ள சுகுவோ என்ற நகரத்திலிருந்து புறப்பட்டு சென்ற பேருந்து ஒன்றில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். அந்த பேருந்து மக்காஸ்-லோஜா என்ற நெடுஞ்சாலை வழியாக பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மரண பீதியில் அலறியுள்ளனர். இந்த […]
