இஸ்ரேல் நாடாளுமன்ற குழு உளவு மென்பொருள்களை விற்பனை செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெகாசஸ் உளவு செயலி விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழு, இஸ்ரேல் நிறுவனங்களால் பிற நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் பெகாசஸ் போன்ற ஊடுருவல் மென்பொருள்களை மறுபரிசீலனை செய்ய சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. மேலும் வருகின்ற ஒன்பதாம் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
