டெல்லி இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத சம்பவம் தான் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட I.E.T வெடிபொருள் வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து அவர் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “2012ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுக்கும் தற்போது நடைபெற்ற குண்டு வெடிப்புக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று […]
