சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் எடப்பாடி பி.ஏ. ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஒவ்வொரு முறையும் அரசியலில் எங்களைப் போன்ற விசுவாசிகளை வீழ்த்தி, அதற்கு அடுத்தபடியாக இருக்கின்ற பொறுப்பாளர்களை வீழ்த்தி, தனக்கு வாழ்வளித்த சின்னம்மா அவர்களை வீழ்த்தி, தான் முதலமைச்சராக தொடர வாய்ப்பு அளித்த ஓபிஎஸ் அவர்களையும் வீழ்த்தி, இன்று வஞ்சகத்தால் துரோகத்தால் இப்படிப்பட்ட பதவியைப் பெற்று, இப்போது அதே வஞ்சக சூழ்ச்சியால் கட்சியை கபளிக்கரம் செய்ய பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. […]
