நீலகிரி மாவட்டம் உதகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட இளைஞரணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் கலந்து கொண்டார். இளைஞரணி நிர்வாகிகள் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாரதிய ஜனதா கட்சியின் சிறப்புகளை பற்றி விளக்கினார். இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
