கொரோனா தொற்றில் இருந்து மீண்ட சசிகலா வரும் 7ஆம் தேதி பெங்களூரில் இருந்து சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக குற்றம் சாட்டப்பட்ட சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக கர்நாடக பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தார். கடந்த 27ஆம் தேதி அவர் விடுதலையானார். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவருக்கு கொரோனா உறுதியானது. இதனை அடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. […]
