விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே தேவனூரில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்தார். இளம் விவசாயியான இவர் பணிக்காக டிராக்டர் ஒன்றை ஸ்ரீராம் நிதி நிறுவனத்தின் மூலம் கடனாக பெற்றுள்ளார். இதற்கு ரூ.30,000 மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டி வந்த நிலையில் நிலுவை தொகை 3 தவணைகள் நிலுவையில் இருந்திருக்கிறது. இந்த நிலையில் நிதி நிறுவன ஊழியர்கள் இன்று காலை கடன் தொகையை செலுத்தவில்லை என்று கூறி விவசாய நிலத்தில் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்து […]
