பெரம்பலூரில் பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு அபிராமபுரத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். பெரியசாமி வேளாண்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். சம்பவத்தன்று இவரது மனைவி ஸ்கூட்டரில் மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவர் ஜெயலட்சுமி கழுத்திலிருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து […]
