இலவங்காய்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்திய அளவில் மிகப்பெரிய இலவம்பஞ்சு சந்தை தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு மெத்தைகள் மற்றும் தலையணைகள் தயாரிக்கும் அலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றது. இதனையடுத்து இரண்டாவதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒருநூறாம் வயல், பத்து காணி, ஆறுகாணி, கூவைக்காடு, வில்லுசாரிமலை, காயக்கரை, வலியமலை, புறாவிளை, மணலோடை, கோலிஞ்சிமடம், மூக்கரைக்கள், மோதிரமலை போன்ற பழங்குடி கிராமங்களில் இலவம்பஞ்சு சாகுபடி அதிக அளவில் நடைபெற்று […]
