நாட்டிலுள்ள ஏழை எளிய மக்கள் அனைவரையும் வங்கி சேவைகள் கொண்டுவரும் நோக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் ஜன்தன் கணக்கு தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதியுடன் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இந்த கணக்குகளில் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவிகள் நேரடியாக வரவு வைக்கின்றன. 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் கூட இந்த கணக்கு தொடங்கலாம். இந்த கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி செலுத்தப்படும். […]
