இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தமிழகத்திலுள்ள அனைத்து முக்கியமான கோவில்களிலும் இலவச பிரசாதம் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து முதற்கட்டமாகத் தமிழகத்திலுள்ள 10 கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வடபழனி முருகன் கோயிலில் தொடங்கி வைத்தார். அந்த வகையில் வடபழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் […]
