தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது . இந்த நோட்டு புத்தகங்கள் எண்ணிக்கை, பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவை மாணவர்கள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப மாற்றி வழங்கப்படும். இந்த நிலையில் இந்த வருடம் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் பல அரசு பள்ளிகளுக்கு இன்னும் தேவையான நோட்டு புத்தகங்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. […]
