நாட்டில் விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்களுக்கு அரசு பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. அதன்படி ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கி நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. அரசின் திட்டப்படி அந்தியோதயா கார்டுவைத்திருப்பவர்களுக்கு வருடத்திற்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக மாநில அரசு 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. […]
