சமூக நலத் துறை வாயிலாக செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக தமிழக அரசால் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எப்படி இலவச தையல் இயந்திரம் பெறலாம் என்பதைப் பார்ப்போம். ஏழைப் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதியானவர்கள். மேலும் இவர்களது மாத வருமானம் ரூ.12,000க்கு மிகாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் வயதுச் சான்றிதழ் பாஸ்போர்ட் சைஸ் […]
