காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் சேர்த்து மொத்தம் 20,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பக்கத்து ஊர்களுக்கு சென்று திரும்பி வருவதற்கு போதிய அளவு போக்குவரத்து வசதி இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுநாள் வரையிலும் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கூடுவாஞ்சேரி வழியாக நீலமங்கலம் செல்லும் அரசு பேருந்தில் தான் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் […]
