பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான், இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் என்னும் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் இலங்கையை சேர்ந்த,பிரியந்தா குமாரா தியாவதனா என்பவர் பொது மேலாளராக இருந்தார். அப்போது, அவரது அலுவலகத்தின் சுவருக்கு அருகில் அனுமதியில்லாமல் ஒட்டப்பட்டிருந்த தெஹ்ரீக் – இ – லபைக் என்ற அமைப்பினரின் மத பிரச்சார சுவரொட்டியை கிழித்து வீசிவிட்டார். இதனையறிந்த, தெஹ்ரீக் – இ – லபைக் அமைப்பை சேர்ந்தவர்கள், […]
