பெற்றோரின் அலட்சியத்தால் 3 வயதுடைய மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், இலங்கியனுர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராம்குமார் மணிமேகலை தம்பதியினர். இவர்களுக்கு மூன்றரை வயதில் விக்னேஷ் மற்றும் சர்வேஷ் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதேபோன்று மணிமேகலையின் சகோதரி மல்லிகா 3 வயதில் விவேகன் என்ற மகன் இருந்துள்ளார். மல்லிகா திருப்பெயர் கிராமத்தில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு தனது இரு குழந்தைகளுடன் மணிமேகலை […]
