மேக்காமண்டபத்தில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம், கோதநல்லூர் பேரூராட்சியில் உள்ள மேக்காமண்டபத்தில் 7-க்கும் அதிகமான இறைச்சி கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளிலிருந்து வெளிவரும் இறைச்சி கழிவுகள், கழிவுநீர் ஆகியவற்றை மழைநீர் வடிகால் ஓடையில் விடுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இப்புகாரின் பேரில் சுற்றுச்சூழல் துறை அலுவலர் சுயம்பு தங்கராணி அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி […]
