இறந்த மாட்டின் உடலை வீசி செல்ல முயன்ற நபர்களை பொதுமக்கள் சிறை பிடித்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கே.நாகூர் பாறைக்குழி பகுதியில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த ஒரு லாரியை பார்த்தவுடன் பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அங்கு சென்று பார்த்தபோது லாரியில் இறந்த மாட்டின் உடல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் லாரியை சிறை பிடித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் […]
