பெலகாவி அருகே தகனம் செய்வதற்கு பணம் இல்லாத காரணத்தால் மூன்று நாட்களாக ஒரு பெண்ணின் உடல் மருத்துவமனையில் இருந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி அருகே கணேசபுரா என்ற கிராமத்தில் 50 வயதுடைய பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு கடந்த 14ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரின் இரண்டு மகன்களும் பாரதியை சிகிச்சைக்காக பெலகாவி பீம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 16ஆம் தேதி […]
