இறந்த நிலையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட கடற்பசு கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில் உள்ள கடற்கரையில் அதிகமாக கடல் பசுக்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள கடற்கரையில் சுமார் 500 கிலோ எடை கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
