நன்னீரில் வாழக்கூடிய நட்சத்திர ஆமைகள் கடற்கரையில் இறந்து கிடந்தது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை மீன்கள், ஆமைகள் போன்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த கடல் பகுதியில் வாழ்ந்த பல அரியவகை உயிரினங்கள் அழிந்து விட்டது. இதனை அறிந்த உயிர்கோளக் காப்பக வனத்துறையினர், வன உயிரின சட்டத்தின்படி கடலில் வசிக்கும் அரிய வகை உயிரினங்களை தனித்தனியாக பிரிக்கப்பட்டு அவைகளை பாதுகாத்து வருகின்றனர். […]
