மனைவி ஒருவர் இறந்த தனது கணவரின் இராணுவ பணியை தான் செய்ய முன்வந்துள்ளதால் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கௌஸ்தூப் ரானே. இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி கனிகா. இந்நிலையில் கடந்த 2018 ம் வருடம் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்திய போது 3 வீரர்கள் பலியாகினர். அதில் இவரும் ஒருவராவார். இதையடுத்து இவருக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட போது அதனை, அவருடைய மனைவி பெற்றுள்ளார். […]
