காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் இரும்பு வாள் வைத்திருந்த இளைஞனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி தலைமையில் காவல்துறையினர் மரைக்காயர்பட்டிணம் சோதனை சாவடி அருகே திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக பதிவு செய்யப்படாத இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வலசை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் மிகவும் கூர்மையாக இரும்பு வாள் […]
