திருமங்கலம்-கள்ளிக்குடி இடையான தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னையிலிருந்து குருவாயூருக்கு மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மதுரை, திருமங்கலம் வழியாக விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது மாலை 6 மணி அளவில் திருமங்கலம்-கள்ளிக்குடி இடையே சென்ற பொழுது தண்டவாளத்தில் பெரிய இரும்பு துண்டுகள் வைக்கப்பட்டிருந்தது. இதன் மீது ரயில் வேகமாக மோதியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பயணிகள் […]
