பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசி போதுமான அளவு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அனைத்து பிரிவினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், இரண்டு தனியார் மருத்துவமனைகள், 15 மினி கிளினிக்குகள் மற்றும் 23 சிறப்பு முகாம்கள் என […]
