நாகையில் இரு தரப்பினரிடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். நாகையில் இருந்த மீனவர்கள் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பிற்கு பிறகு பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். அதேபோல ஆரிய நாட்டு தெருவில் வசித்து வந்த மீனவர்களும் பல்வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு ஆரிய நாட்டு தெருவில் இருப்பவர்களுக்கும், மகாலட்சுமி நகரில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கும் மீனவ பஞ்சாயத்தார் பொறுப்பு சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மாலை 6 மணி அளவில் கடந்த 7-ஆம் […]
