இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் நூல் மில் மேற்ப்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நூல் மில்லில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜமுனாதேவி என்ற எண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல்-கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே திருச்சி மாவட்டத்தை சேர்ந்த […]
