அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை பிடிப்பதற்காக தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக தொடர்பான பிரச்சனை நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டதோடு, சபாநாயகருக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்பி உதயகுமாருக்கு வழங்கப்பட்டதாகவும், சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் […]
