ஈராக் நாட்டின் ராணுவ முகாமில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாக்தாத் நகரிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தியாலா மாகாணத்தில் உள்ள அல் ஆசிம் என்ற மாவட்டத்தில் அமைந்திருக்கும் மிகப்பெரிய ராணுவ முகாமிற்குள், நேற்று அதிகாலை நேரத்தில் அதிரடியாக தீவிரவாதிகள் நுழைந்தனர். அதன்பின், வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள். அப்போது ராணுவ வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். எனவே, தீவிரவாதிகள் […]
