அரசு பள்ளியில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் சுமார் 2 மணி அளவில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது இச்சம்பவத்தன்று கோபி என்பவர் இரவு நேர காவலில் ஈடுபட்டார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் இவர் ரோந்து சென்ற போது மர்ம நபர்களால் தலைமைஆசிரியர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து உள்ளே சென்ற கோபி […]
