கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர், ஜோத்பூர், அஜ்மீர், பைக்னர்,உதய்ப்பூர், அல்வார் மற்றும் பில்வாரா ஆகிய நகரங்களில் இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் […]
