இரயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே பாளையங்கட்டி பகுதியில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காயங்களுடன் ஒரு சடலம் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சீதாச்சிவிளையை சேர்ந்த ஜெபராஜ் என்பது […]
