தர்மபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்துள்ள புதூர் அருகே பெங்களூர்- சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டது. அந்த கோர விபத்தில் திருச்சியை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் . அதுமட்டுமல்லாமல் 11 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் . மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
