கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்ட பிறகும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ் திரையுலகின் எவர்கிரீன் நாயகி நதியா தெரிவித்துள்ளார். நடிகை நதியா தற்போது லிங்குசாமி இயக்கி வரும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகின்றது. தமிழ் திரையுலகில் எவர்கிரீன் நாயகி என்று போற்றப்படும் நடிகை நதியா திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் மும்பையில் வசித்து வருகிறார். தனக்கு கதை பிடித்திருந்தால் மட்டுமே சில படங்களில் நடிப்பார். […]
