சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர்-குன்னம் தொகுதியில் 3 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் பகுதியில் மூன்று தேர்தல் பறக்கும் படையினர் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன. […]
