உத்தரபிரதேசத்தில் உள்ள இரட்டை கோபுரங்கள் சட்டவிரோத கட்டுமானங்கள் என கண்டறியப்பட்டு இடிக்கப்பட உள்ளதால், அதன் அருகே டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக நொய்டா காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 முதல் 28 வரை எந்த ஒரு தனியாரோ, நிறுவனமோ டிரோன் விமானங்களை இயக்கக் கூடாது. உத்தரவை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை மற்றும் போலீஸ் படைகள் […]
