சோமாலியாவில் அரசு அலுவலகத்தில் நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் சோமாலியாவில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத அமைப்பானது சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகின்றது. மேலும், பொதுமக்கள், ராணுவத்தை குறிவைத்து அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். […]
